கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

21.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* டாஸ்மாக் ரெய்டு விவகாரம்; அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
* சென்னையில் நாளை (22.3.2025) நடைபெறும் தொகுதி சீரமைப்பு பிரச்சினை குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் சென்னை வருகை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சமத்துவமின்மையை வெளிப்படுத்துவதில் முக்கியமானது: ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*வரலாற்றில் அவுரங்கசீப்பை பற்றிய அறியாமை, முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்பு அவரது நினைவிடத்தை அழிக்க அழைப்புகளை முன்வைக்கிறது: எழுத்தாளர் ஆட்ரி ட்ருஷ்கே
* இந்தியாவில் வீட்டுக் கடன் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது, சேமிப்பைப் பாதிக்கிறது: பொருளாதார நிபுணர் பினாகி சக்கரவர்த்தி.
* தணிக்கை மற்றும் அய்டி சட்ட மீறல்கள் தொடர்பாக எலோன் மஸ்க்கின் எக்ஸ் தளம் ஒன்றிய அரசு மீது வழக்கு தொடர்ந்து.
* ஒன்றிய அரசின் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக கருநாடக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது
தி இந்து:
* சில முக்கிய செயல்பாடுகளை வைத்துக் கொண்டு கல்வித் துறையை கலைக்க கோரும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். “மாநிலங்கள், சமூகங்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உண்மையில் வேலை செய்யும் கல்வியை மாற்றி அமைக்கலாம்.” என டிரம்ப் ஆதரவாளர்கள் ஆதரவு.
* எஸ்.சி. பிரிவினர் உள் ஒதுக்கீட்டை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆந்திர அரசு செயல்படுத்த உள்ளது
* விவசாயத் தலைவர்கள் காவலில் பட்டினிப் போர்; ஆம் ஆத்மி, பாஜக பெருநிறுவன நலன்களுக்காக நிற்கின்றன என்று எஸ்.கே.எம். குழுக்கள் கண்டனம்.
தி டெலிகிராப்:
* செயற்கை நுண்ணறிவு மூலம் எலான் மஸ்க்கின் புதிய கருவியான க்ரோக், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். குறித்து பயனர்களின் கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய பதில்களை தந்துள்ளது. “‘இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?” என்று கேட்ட பயனர் கேள்விக்கு க்ரோக் பதிலளித்தது: ‘நரேந்திர மோடி பெரும்பாலும் இந்தியாவின் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதியாக காணப்படுகிறார்’ என பதில் அளித்துள்ளது.
* பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்கான 10 சதவீத உச்சவரம்பை நீக்குவதற்கான யுஜிசி திட்டத்திற்கு மோடி அரசு ஆதரவு.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *