பட்டாசு புகை எதிரொலி உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் ஒன்றானது டில்லி!

Viduthalai
2 Min Read

மேலும் 2 இந்திய நகரங்களும் இடம் பிடித்தன!

புதுடில்லி, நவ.14- தீபா வளிக்கு பட்டாசு வெடித் ததால் காற்றில் புகை மூட்டம் அதிகமானதால் உலகின் மிகவும் மாசு பட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டில்லிஇடம் பெற்றுள்ளது. மேலும் இரண்டு இந்திய நகரங் களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.

தீபாவளி   கொண்டாட் டத்தில் பட்டாசுக்கு தனி இடம் உண்டு. பட்டாசு வெடிக்கப்படுவதால் ஒவ் வோர் ஆண்டும் நடை பெறுவது போல இந்த ஆண்டும் தேசியத் தலை நகர் காற்று மாசு அளவில் முதலிடம் பிடித்தது. சுவிஸ் குழுவின் காற்று தரக்குறியீட்டு அளவின் படி, டில்லியில் காற்றின் தரக் குறியீடு 420 ஆக, ஆபத்தானது என்ற நிலையில் இருந்தது. ஆனால் இந்த முறை டில்லியுடன், முதல் 10 இடங்களில் கொல்கத்தா வும், மும்பையும் இணைந் துள்ளன. கொல்கத்தா 196 என்ற காற்று தரக்குறியீட்டுடன் 4ஆவது இடத் திலும், இந்தியாவின் வர்த் தக நகரமான மும்பை 163 என்ற காற்று தரக்குறியீட் டுடன் 8ஆவது இடத்தி லும் இருக்கின்றன.

12.11.2023 அன்று இரவு முதலே டில்லியில் அடர்த்தியான புகை மண்டலம் உண்டாகி காற்றின் தரம் 680 என்ற மிகவும் ஆபத்தான நிலை என்பதைக் கடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட் டத்தின் போது டில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தாலும் அந்த தடை தீவிரத்துடன் அமல்படுத் தப்படுவதில்லை. 

இதனால் டில்லியில் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வரு கிறது.

இந்தியாவில் ஒவ் வொரு குளிர் காலத்துக்கு முன்பாகவும் காற்றின் தரம் மிகவும் மோச மடைகிறது. குளிர்ந்த காற்று, வாகனங்களின் புகை, தொழிற்சாலைகள், கட்டுமானப் பணி தூசு மற்றும் வேளாண்மை கழிவு களை எரித்தல் போன்ற காரணிகளால் காற்று மாசு அடைகிறது.

இதனிடையே டில்லியில் கடந்த வாரத் தில் மிகவும் மோசம் என்ற நிலையில் நீடித்து வந்த காற்றின் தரம் 10.11.2023 அன்று பெய்த மழையால் சற்றே மேம் பட்டிருந்தது. இதனால் ஒற்றை – இரட்டை இலக்க திட்டத்தை அதிகாரிகள் ஒத்தி வைத்தனர். தீபாவ ளிக்கு பிறகான காற்று மாசு அதிகரிப்பால் மீண் டும் அதனை நடைமுறைப் படுத்த அதிகாரிகள் திட் டமிட்டு வருகின்றனர்.

காற்றின் தரக் குறி யீடு 400 – 500 ஆக இருந் தால், காற்று மிகவும் மோச மடைந்து இருப்பதாக அர்த்தம். இந்த நிலையில் ஆரோக் கியமானவர்களும் பாதிப்படையும் நிலை ஏற் படும். காற்றின் தரம் 0-50 வரையில் இருந்தால், நன் றாக இருப்பதாக அர்த்தம்.

டில்லியில் நிலவரம்: 

டில்லியில் 13.11.2023 காலை 7 மணிக்கு காற் றின் தரக்குறியீடு 275 ஆக மோசம் என்ற நிலையில் இருந்தது. இதனிடையே ஷாதிபூரிலர் 315, அய நகரில் 311, லோதி சாலை யில் 308, புசாவில் 355, ஜஹாங்கீர்பூரியில் 333 என மிகவும் மோசம் என்ற நிலையில் காற்றின் தரம் இருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *