லக்னோ, மார்ச் 20- ஒலிம்பிக் சாம்பியன்களான வினேஷ்போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் ஆகியோர், மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பா.ஜனதா மேனாள்
மக்களவை உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து டில்லியில் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சிங், நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
பிரிஜ் பூஷன் சிங் மற்றொரு வழக்கிலும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். 1990இல் தன்னை சந்திக்க வந்த 3 பேர், தன்னை தாக்கியதாக புகார் அளித்து இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேர் இறந்துவிட்டனர். மூன்றாம் நபரான வீரேந்திர குமார் மிஸ்ராவை அடையாளம் தெரியவில்லை என்றும் அவர் தன்னை தாக்கவில்லை என்றும் பிரிஜ் பூஷன் மறுத்தார். இதனால் மிஸ்ரா கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
ஆனால் பொய் சாட்சியம் அளித்ததற்காக பிரிஜ் பூஷன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பிரிஜ் பூஷனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால் ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரிஜ் பூஷன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வாரண்டை ரத்து செய்த நீதிமன்றம், பிரிஜ் பூஷ னுக்கு ரூ.500 அபராதம் விதித்து வழக்கை முடித்து வைத்தது.