துறையூர், மார்ச் 20- துறையூர் கழக மாவட்ட சார்பில் காளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் 19.3.2025 அன்று மாலை 6.30 மணியளவில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு – கல்விக்கான நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் – அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.மணிவண்ணன் தலைமை வகித்தார். மாநில ப க அமைப்பாளர் அ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் முசிறி மா. ரத்தினம். மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி. மாவட்ட காப்பாளர் ப. ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா பெரியார் செல்வன் துறையூர் கழக மாவட்டத்தில் காளிப்பட்டியில் புதிய கிளைக் கழகத்தை துவங்கி வைத்து கிளை செயலாளர் ஞானசேகரன் பயனாடை அணி வித்தார். பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார் நன்றி கூறினார்.
கலந்து கொண்டோர்
திமுகவைச் சேர்ந்த தர்மன் ராஜேந்திரன். மாவட்ட பொரு ளாளர், மெடிக்கல் ந.முரளி, அறங்காவலர் குழு தலைவர், ஒன்றிய செயலாளர்கள் இள. அண்ணாதுரை, மு. வீரபத்திரன், ஒன்றிய மேனாள் சேர்மன். திருமதி. சரண்யா மோகன்தாஸ். சிங்களாந்தபுரம் கிளை செயலாளர் வே. விஜயகுமார். தெற்கியூர் வைர பெருமாள். சிங்களாந்தபுரம் பாரதி ஆகியோரும்,
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை தலைவர் த.ரஞ்சித்.மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ரெ. தன்ராஜ். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண் ராஜ். மாவட்ட ப. க. செயலாளர் பிரபு. மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ். மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் பாலச்சந்திரன். துறையூர் நகர தலைவர் ந. இளையராஜா. நகர இளைஞரணி செயலாளர் ஸ்டாலின். பொதுக்குழு உறுப்பினர்கள் பெ.பாலகிருஷ்ணன் இரா நந்தகுமார். மிலிட்டரி மணி. நகர ப. க. அமைப்பாளர் அ. தமிழ்செல்வன். நகர ப. க. துணை அமைப்பாளர் க. கபில் தேவ். சிங்களாந்தபுரம் கிளை செயலாளர் ஞான சேகரன் ஆகியோரும்,
விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பொன்னுசாமி.ஜீவா நகர் தீனதயாளன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் வியாபாரிகள். இளைஞர்கள் கலந்து கொண்டனர்.