Grok-கிடம் முட்டி மண்டையுடையும் கிராக்குகள்!
சேட் ஜிபிடி(Chat GPT)-யைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் பல செயலிகள் வந்துடுச்சு! அவசியமான கேள்விகளைக் கேட்டு பதில் வாங்க, தெரியாத விசயங்களைத் தெரிஞ்சுக்க, பல மணி நேரம் அமர்ந்து ஒரு மனிதன் செய்ய வேண்டிய வேலைகளை நொடிப் பொழுதுகளில் விரைந்து முடிக்க, மனுசனால செய்ய முடியாத விசயங்களையும் செய்ய வைக்க என்று பலவகையிலும் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் எல்லோரையும் வியக்க வைக்குது!
அறிவியல் எவ்வளவு மகத்தான விசயங்களோட வந்தாலும், அதைத் தன்னோட சல்லித்தனமான, சில்லித் தனமான புத்தியோட அணுகுவது தான் நம்மூர் சங்கிகளின் வழக்கம். செயற்கை நுண்ணறிவுக்கு என்னென்ன தகவல்கள் கிடைச்சிருக்கோ, அதை வைச்சுத் தான் அதனுடைய செயல்களும், பதில் களும் இருக்கும்.
வந்திருக்கும் செயற்கை நுண்ண றிவுச் செயலிகளில் சேட் ஜிபிடி பெரும் பாலும் அரசியல் ரீதியான பதில்களைச் சொல்றதில்ல… ஃபேஸ்புக்கோட மேட்டா (Meta), டுவிட்டரோட க்ராக் (Grok), கூகிளோட ஜெமினி (Gemini), விண்டோஸோட கோ பைலட் (Co Pilot) இப்படி ஏராளமான நிறைய பெரிய நிறுவனங்கள் தங்களோட செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலிகளை வடிவமைச்சுக் கொண்டு வந்திருக்காங்க.
இதில எக்ஸ் (டுவிட்டர்) தளம் எப்பவுமே அரசியல் கொதிநிலையில இருக்கிற இடம். அவங்க கொண்டு வந்திருக்கிற ‘க்ராக்’குங்கிற செயற்கை நுண்ணறிவுச் செயலி கிட்ட வழக்கம் போல திராவிட இயக்கத்தையும், முற்போக்குச் சக்திகளையும் பற்றி நிறைய கேள்விகள் கேட்டு, அவதூறைப் பதிய வைக்கலாம்னு சங்கிகள் முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க!
தகவல்களை வைத்தே பதில் சொல்ல பயிற்றுவிக்கப்பட்ட அந்த செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், இந்த சங்கிச் சல்லிகளின் கேள்விகளுக்கு ஆதாரப் பூர்வமா பதில் சொல்லி, இவங்களை அலற வுட்டுட்ருக்கு! கடந்த ரெண்டு மூணு நாளா சமூக ஊடகங்களில் க்ராக்கிடம் மிதி வாங்கிய இந்த கிராக்குகளின் காமெடி தான் டிரெண்டிங்ல போய்க்கிட்டிருக்கு.
அதில குறிப்பாக “பெரியார் தன் மகளை மணந்தாரா?” அப்படின்னு கேட்ட கேள்விக்கு அது ஒரு தவறான தகவல். பெரியார் திராவிட அரசியலின் தந்தை, தமிழ்நாட்டின் சமூக மாற்றத்தின் மய்யப் புள்ளி, ஜாதிகளுக்கு எதிராகப் போராடியவர். அப்படின்னு பதில் சொல்லியிருக்கு க்ராக் (Grok).
கல்லக்குடி போராட்டத்தைக் குறிப்பிட்டு, கலைஞர் ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்தாரா? அப்படின்னு கேட் டதுக்கு, “ரயில் வராத தண்டவாளத்தில் கருணாநிதி தலை வைக்க வில்லை. 1953 ஜூலை 15 அன்று, கல்லக்குடி ரயில் நிலையத்தில் ரயில் செல்லும் பாதையில் படுத்துப் போராடினார். அது உயிருக்கு ஆபத்தான, தைரியமான செயல்” அப்படின்னு பொளிச்சுன்னு (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல… பொளிச்சுன்னு தான்) பதில் சொல்லி ருக்கு க்ராக்.
அப்புறம் அது கிட்ட போய் சண்ட போட் டுக்கிட்டிருக்காங்க இந்த சங்கிகளெல்லாம்!
ஆர்.எஸ்.எஸ்.சுக்கும், விடுதலைப் போராட்டத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதையும் ஒரு கேள்விக்குப் பதிலா கொடுத்திருக்கு! தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தான் என்றும், 18 ஆண்டுகள் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரிய துன்னும், அண்ணாவும், காமராஜரும் அதற்கு அடித்தளம் அமைத்தவர்கள்னும் பதில் சொல்லிருக்கு க்ராக்! அதை விட “தமிழ்நாட்டில் பொய்ச் செய்தி பரப்புவோர் யார்?”ங்கிற கேள்விக்கு அது சொன்ன பதில் தான் அல்டிமேட்! அண்ணாமலை, ஹெச்.ராஜா, சீமான், மாரிதாஸ்ன்னு கொடுத்த பட்டியலைக் கண்டு சமூக ஊடகங்களெல்லாம் ஒரே சிரிப்பு தான்!
இப்போதுள்ள செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், தங்களுக்குக் கிடைக்கும் பல்வேறு தகவல்களிலிருந்து செய்திகளைத் தெரிஞ்சுக்கிட்டு பதில் சொல்லும்படி தான் வடிவமைக்கப்பட்டிருக்கு. இன்னும் எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்ளும்படி தான் அதன் தொழில்நுட்பம் இருக்கு. பொய்யையும், புரட்டையும் மூலதனமா வைச்சே பேசிப் பழகுன இந்த சங்கிகள் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளையும் அப்படிப் பழக்கலாமான்னு செய்யுற முயற்சிகள் தான் இந்த கேள்விகளெல்லாம்!
சேட் ஜிபிடி, ஜெமினியை எல்லாம் மிரட்டியதுபோல். எலான் மஸ்க்கின் எக்ஸ் – க்ராக்கை பா.ஜ.க.வால் மிரட்ட முடியவில்லை என்று ஒரு தகவல். இன்னொருபுறம் இப்போது செயற்கை நுண்ணறிவின் எல்லா பதிலையும் நம்ப வைச்சு, பிறகு தங்களுக்குத் தேவையான மாதிரி மாற்றிக் கொள்ளலாம்னு ஆர்.எஸ்.எஸ். கருதுவதாகவும் இன்னொரு தகவல்.
ஆனால், இப்போதைக்கு இந்தக் கிராக்குகள் Grok-கிடம் முட்டி மண்டையுடைஞ்சுக்கிறது தமாசாத்தான் இருக்கு!
– குப்பைக்கோழியார்