மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெற்றாலும் மகளிர் உதவித் தொகை பெறலாம் அமைச்சர் தகவல்

1 Min Read

சென்னை, மார்ச் 19- மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற்றிருந்தாலும், அந்த குடும்பத்து மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில்

இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேசும்போது, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு 1,500 வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குழந்தைகளை பாதுகாக்கின்ற தாய்மார்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுகிறது.

1,500 ரூபாய் வாங்கும் போது ஏதாவது ஒன்று கிடைக்கும் போது, இந்த உதவி கிடைக்காது என்று சொல்லி விடுகிறார்கள். ஆகவே அந்த 1,000 ரூபாய் கிடைத்தால் மொத்தம் 2,500 ரூபாயை வைத்து முழுமையாக அந்த குடும்பம் குழந்தையை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும். இதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன், “மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற்றிருந்தாலும் அந்த குடும்பத்திற்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது தான் நம்முடைய முதலமைச்சர் அளித்த உத்தரவாதம், உத்தரவு” என்று குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *