திராவிடர் கழகம் !
தமிழ்நாட்டு சமூக, அரசியல் பரப்பில் ஆழமாக ஊன்றிய இயக்கம். தந்தை பெரியார் காலத்துக்கு பின் அரை நூற்றாண்டுக்கு மேலாக அதனை தலைமை தாங்கி நடத்தி வருகிறார் கி.வீரமணி. பொருளாதாரத் துறையில் பட்டம், சட்டத்துறையில் பட்டம் இவற்றுடன் பெரியாரின் பாசறையில் பயின்ற சீர்திருத்தக் கருத்து களுடன் 92வயதிலும் சுறுசுறுப்புடன் இயங்குகிறார் வீரமணி.
1978இல் வீரமணி இலங்கை வந்த போது கொழும்பில், புதுக்கடையில் ஒரு தி.க. தோழர் இல்லத்தில் அவரை சந்தித்து பேட்டி கண்டேன். 1983ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் பின் சென்னையில் இரண்டொரு தடவை மீண்டும் சந்தித்து பேட்டி கண்டேன். 1977ஆம், 1981ஆம், 1983ஆம் ஆண்டு இனக் கலவரங்களின் போதும் அன்றைய கால கட்டத்தில் இந்திய, இலங்கை ஒப்பந்தத்துக்கு முன்பும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முழு தமிழ் நாடும் கொந்தளித்துக் கொண்டிருந்த காலத்தில் திராவிடர் கழகத்தின் அறிக்கைகள், வீரமணியின் கருத்துகள் இலங்கையில் ஜே .ஆர். அரசுக்கு தலையிடியாக இருந்தது உண்மை!
இப்போது 35 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னியில் வீரமணியை மீண்டும் சந்தித்து உரையாட வாய்ப்பு கிட்டியது அதிசயம்தான்!!
– தாஸ் .சுந்தரதாஸ்