பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல் கழக பிரச்சார கூட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

viduthalai
2 Min Read

மேட்டுப்பாளையம், மார்ச் 18- மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16-3-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் குட்டை புதூரில் மாவட்ட துணை செயலாளர் க.நாராயணன் இல்லத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கா.சு.அரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று திராவிடர் கழக செயல்பாடுகள், அமைப்புப் பணிகள், பிரச்சாரப் பணிகள், விடுதலை சந்தா சேகரிப்பு, மற்றும் புதுப்பிப்பு மற்றும் பெரியார் உலகம் குறித்து சிறப்புகளை விரிவாக எடுத்துகூறி வழிகாட்டுதல் உரையாற்றியதோடு புதிய தோழர்கள் கழக கொள்கைகளை அறிந்து கொள்ளும் விதமாக சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் நா.பிரதீப், இரா.இளவரசன், பா.பாலசுப்பிரமணியம், மேட்டுப்பாளையம் நகர தலைவர் கோ.அர. பழனிச்சாமி, வீ.செல்வராஜ், குப்புசாமி, ரா.முருகசாமி, கோ.அன்ப ரசன், மு.பிரபாகரன், ரங்கசாமி, எழில் இராமலிங்கம், ஆனைகட்டி சம்பத், அ.அபுதாகிர், நு.சர்ஜீன் ,கோகிலேஸ், தர்னீஸ், அஜய், மகேஷ்பூபதி, மற்றும் அ.மு.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவாக மேட் டுப்பாளையம் நகர செயலாளர் வெ.சந்திரன் நன்றி ரையாற்றினார்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியாரின் கொள்கை களை மேடை தோறும் முழங்கி வந்த கவிஞர் நந்தலாலா மறைவு தமிழ்ச் சமுகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரின் மறைவுக்குப் கலந்துரையாடல் கூட்டம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
மாவட்ட துணை தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் வாழ் விணையர் சுப்புலட்சுமி மறைவிற்கும் கலந்துரையாடல் கூட்டம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

15- 2 -2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு கோவை மாவட்டத்தில் விடுதலைச் சந்தாக் களை புதுப்பித்து வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி பெரியார் சிலையுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு கோவை மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து தருவதென முடிவு செய்யப்படுகிறது.

மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பேரூராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சார கூட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் ஹிந்தி சமஸ்கிருதத்தை எதிர்த்து பண்பாட்டு பாதுகாப்பு பரப்புரை பொதுக்கூட்டம் மேட்டுப்பாளை யத்தில் ஏப்ரல் 22இல் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளை செய்வ தென்றும் அனைத்து தோழர்களும் பெரும் திரளாக கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *