பிஜேபி ஆட்சியின் தோல்வி!

1 Min Read

நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படை சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.93,357.52 கோடி சரிவு

மும்பை, மார்ச் 18 நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படை சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.93,357.52 கோடி சரிந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.44226.62 கோடி குறைந்து ரூ.6,55,820.48 கோடியாக சரிந்தது. டிசிஎல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.35,801 கோடி சரிந்து ரூ.12,70,799 கோடியாக குறைத்தது. இந்துஸ்தான் யுனிலீவரின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.6567 கோடி சரிந்து ரூ.5,11,236 கோடியாக குறைந்தது. கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூ.2301 கோடி, எஸ்பிஅய் சந்தை மதிப்பு ரூ.4462 கோடி குறைந்தன.

அய்சிஅய்சிஅய் வங்கி, எச்டிஎப்சி வங்கி, அய்டிசி, பஜாஜ் பைனான்ஸ், ஏர்டெல் ஆகியவற்றின் சந்தை மதிப்பு ரூ.49,834 கோடி உயர்ந்தது. அய்சிஅய்சிஅய் வங்கியின் சந்தை மதிப்பு ரூ.25,459 கோடி அதிகரித்து ரூ.8,83,202 கோடியாக உயர்ந்துள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு ரூ.12,592 கோடியும் அய்டிசி சந்தை மதிப்பு ரூ.10,073 கோடியும் அதிகரித்துள்ளன. பஜாஜ் பைனான்ஸின் சந்தை மதிப்பு ரூ.911 கோடியும் பார்த்தி ஏர்டெல் சந்தை மதிப்பு ரூ.798 கோடி உயர்ந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *