சென்னை, மார்ச் 16- 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவ- மாணவிகள் பயன்பெறுவதற்கு ஏதுவாக அவர்களின் விவரங்களை பதிவு செய்ய பள்ளிகளுக்கு, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப் பணித் திட்டம்) சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 2024-2025ஆம் கல்வியாண்டில் 18,35,456 மாணவ- மாணவிகள் விவரங்களை சரிபார்த்தல் மற்றும் 24,646 மாணவ-மாணவிகள் விவரங்களை உள்ளீடு செய்தல் போன்ற பணிகள் நிலுவையில் இருக்கிறது.
7.5 சதவீத இடஒதுக்கீடு தேர்வு செய்யப்படாமல், எஸ். எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்க இயலாது.
7.5 சதவீத இடஒதுக்கீடு சரிபார்த்தல் எமிஸ் தளம் வாயிலாக மேற்கொள்ளப்பட இருப்பதால், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிஎஸ், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு 1ஆம் வகுப்பு முதல் படித்த விவரங்களை தமிழ்வழி, ஆங்கிலவழி போன்ற விவரம் விடுதல் இன்றி தேர்வு செய்து பள்ளி ஆசிரியர்கள் சரிபார்த்து 7.5 சதவீத இடஒதுக்கீடு சரிபார்த்தல் பட்டியலை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.