திருவனந்தபுரம், மார்ச் 15- கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் காந்தியவாதி கோபிநாதன் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி பங்கேற்று சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி, பாஜக- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார். துஷார் காந்தி பேசுகையில், இந்தியாவின் ஆன்மாவை ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகள் என சங் பரிவாரங்கள் எனும் புற்று நோய் முடக்கி வைத்திருக்கிறது என காட்டமாக கூறினார்.
மேலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஆபத்தான எதிரிகள்; கேரளாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்; ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷம் எனவும் விமர்சித்தார் துஷார் காந்தி.