கிராமம் முதல் பேரூராட்சி, நகராட்சியில் கழகப் பிரச்சார கூட்டங்கள் நடத்த லால்குடி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

Viduthalai
1 Min Read

லால்குடி, மார்ச் 14- 27-02-2025 அன்று மாலை. 6 மணியளவில் லால்குடி பெரியார் திருமண மண்டபத்தில் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் நடைபெற்றது மாவட்ட செயலாளர் அங்கமுத்து அனைவரையும்வரவேற்று உரை ஆற்றினார்.
லால்குடி மாவட்ட தலைவர் தே. வால்டேர் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் ஆல்பர்ட் பொதுக்குழு உறுப்பினர் முத்துச்சாமி மாவட்ட துணைத் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கழக செயல்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார்கள்.

மாவட்ட இளைஞரணி செயலா ளர் பனிமலர்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் இசைவாணன், காட்டூர் பிரபாகரன் பாபு, மாவட்ட ப.க. அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு, மண்ணச்சநல்லூர் சிவசங்கரன், லால்குடி ஒன்றிய செயலாளர் மணிவாசகம், காட்டூர் வீராசாமி, புள்ளம்பாடி பொற்செழியன், ஆரோக்கியசாமி, தனபால், யாக்கோப், திருமங்கலம் மருதை, பரமசிவம், லால்குடி சண்முகசுந்தரம், வாளாடி இன்பராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தீர்மானங்கள்

15-02-2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு லால்குடி மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் சிலையுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு லால்குடி மாவட்டத்தின் சார்பாக பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
லால்குடி மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சாரக் கூட்டங்களை பரவலாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *