கேதாரிமங்கலம் தோழர் தி. வீரமணிக்கு நமது வீரவணக்கம்

1 Min Read

நாகை மாவட்டம் திருமருகல் அருகில் உள்ள கேதாரிமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு டி.எஸ். திருவேங்கடம், தீவிரமான இயக்கத் தோழர். குறிப்பாக என்னிடத்தில் மிகுந்த அன்பு பாராட்டியவர். அவர் மறைந்த பின்பும் அந்தக் குடும்பத்தார் அனைவரும் நமது இயக்கத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாவர்.

மகனும், திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகத்தின் தலைவருமான மானமிகு தி. வீரமணி அவர்கள் மறைவுற்றார் (11.3.2025) என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரது மறைவின்மூலம் நல்ல ஒரு செயல் வீரரை இழந்துள்ளோம். அவர் தனது தந்தையைப் போன்றே இயக்கத்திற்குத் தொண்டாற்றிய நம் தோழராவார்.
அவரது வாழ்விணையர் திருமதி ஜீவா மற்றும் பிள்ளைகள் வீ. விஜய், வீ. வினிதா, வீ. கவுசல்யா, சகோதரர்களான தி. குணசேகரன், திருவேங்கடரவி, தி. இளங்கோவன், தி.காமராஜ், தி. சிங்காரவேலு, தி. இராஜேந்திரன் மற்றும் உறவினர்களுக்கும், நாகை மாவட்ட – அவ்வட்டாரத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த துயரத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!

முகாம்: சிட்னி, ஆஸ்திரேலியா

13.3.2025

 கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *