புதுடில்லி, மார்ச் 13 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.
கோரிக்கை
இது தொடா்பாக அவா் மக்களவையில் பேசியதாவது: நேற்று (12.3.2025) மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய நெருக்கடியை எதிா்நோக்கி வருகிறது. தொடா்ந்து இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதியைக் குறைத்து வருகிறது. ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு தேவையெனில் வெறும் ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால், 50 நாள்களுக்கும் குறைவாகவே வேலைவாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பணியாற்றுவோ ருக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். தற்போது நான்கு முதல் 5 மாதங்கள் வரை ஊதியம் நிலுவையில் உள்ளது. நாடு முழுதும் ரூ.12,719 கோடி ஊதியமாகவும், ரூ.13,227 கோடி கட்டுமானப் பணிக்கும் என மொத்தம் ரூ.23,446 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
நிலுவைத் தொகை
தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.1,652 கோடி ஊதியமாகவும், ரூ.1,056 கோடி ரூபாய் கட்டுமானப்பொருள் கூறுகளுக்கும் என மொத்தம் ரூ.2,708 கோடி வழங்கப்பட வேண்டியுள்ளது. கடந்த ஜனவரியில் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், நிதி விடுவிக்கப்படவில்லை.
இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளனா். எனது கரூா் மக்களவைத் தொகுதியில் பெண்கள் மாற்றுத் திற னாளிகள், முதியவா்கள் நிலைமை மிகவும் வேதனையாக உள்ளது. அதனால், தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,708 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.