சென்னை,மார்ச் 9- மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகார பகிா்மானம் வழங்க உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ள முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கு, ஆய்க்குடி அமா் சேவா சங்க நிறுவனா்- தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன், செயலா் எஸ்.சங்கரராமன் ஆகியோா் நன்றி தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு முதலமைச்சர் தனது 72ஆவது பிறந்த நாளில் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராகும் திட்டத்தை பிரகனப் படுத்தியுள்ளாா்.
மாற்றுத் திறனாளி களுக்கு தனி இலாகாவை தோற்று வித்ததோடு, அந்த இலாகாவை தாமே கையாண்டு வரும் முதலமைச்சர், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளாா். இதை அமா் சேவா சங்கம் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
இச்சட்டத் திருத்த மூலம் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளின் குரல் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் (ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) ஒலிக்கும்.
எல்லா நிலை களிலும் தமிழ்நாடு முதல்நிலை பெற்று வருவதோடு மாற்றுத் திறனாளிகளுக்கான பகிா்மான சட்டம் பெரும் பாராட்டை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.