லக்னோ, மார்ச் 9- உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையா ளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், 8.3.2025 அன்று சீதாபூர் அருகே லக்னோ – டில்லி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பட்டப்பகலில் மற்றொரு வாகனத்தில் வந்த 3 நபர்கள் தள்ளி விட்டனர். இதனைத் தொடர்ந்து, கீழே விழுந்து கிடந்த ராகவேந்திராவின் தோளிலும், மார்பிலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பியோடி விட்டனர்.
இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் ராகவேந்திராவை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.