பெரியார் சிலைக்கு நிரந்தர ஏணி அமைத்து தர கோரிக்கை

1 Min Read

சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் மிக உயரத்தில் இந்த தந்தைப் பெரியார் சிலை இருக்கிறது. ஆனால் ஏணி வசதி இல்லாததால் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் போன்ற நிகழ்வுகளின் போது மாலை அணிவிக்க இயலவில்லை.
அரசு ஊழியர்கள் தற்காலிக மர ஏணியை பயன்படுத்தி அரசு சார்பான மாலையை அணிவிக்கிறார்கள். அது எப்போதேனும் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். கடந்த முறை அந்த மர ஏணியை பயன்படுத்தி மாலை அணிவித்தவன் என்கிற முறையில் இதை உணர்ந்து சொல்கிறேன்.
ஆகவே இந்த பெரியார் சிலைக்கு இரும்பு படிக்கட்டு ஏணி வசதி செய்து தருமாறு தமிழ்நாடு அரசை தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

– பெரியார் யுவராஜ்
தென்சென்னை இளைஞரணி மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *