சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது பதியப்பட்ட குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்வதற்கு காவல்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2022இல் தீட்சிதர்கள் 2 பேர் மீது பதியப்பட்ட இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர், பாதிக்கப்பட்ட பெண் தற்போது வழக்கில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காக, வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதாடினார்.