சென்னை தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

viduthalai
1 Min Read

சென்னை,மார்ச் 8- சென்னை தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி k;aயம் உள்ளடக்கிய பொது சதுக்கப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.3.2025) சென்னை, தீவுத்திடலில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 1,63,039 சதுர அடி கட்டடப் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மய்யத்தை உள்ளடக்கிய பொது சதுக்கப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர் பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மய்யம் உள்ளடக்கிய பொது சதுக்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மய்யம். நமது பாரம்பரியமிக்க கட்டடக்கலை அமைப்புடன், 40 கண்காட்சி அரங்குகள், பொது நிகழ்ச்சி கூடங்கள், உணவகங்கள், 8 மின் தூக்கி வசதிகள், 148 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 148 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகள் மற்றும் 200 நவீன கழிப்பிட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சி மய்யம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிரந்தர COLDILILDIL அமைக்கப்படுவதால், அரசின் பல்வேறு துறைகளின் செலவினங்கள் குறைக்கப்படுவதுடன், மக்களுக்கு தேவையான, அனைத்து மேம்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம். அரசு துறைகளின் கண்காட்சிகள். கருத்தரங்குகள். பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இம்மய்யத்தில் நடத்தப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *