வீட்டுமனை கேட்டவர்களுக்கு 6 மணி நேரத்தில் பட்டா வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி

1 Min Read

பழவனக்குடி, மார்ச் 7 தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருடன் நேற்று (6.3.2025) காலை கலந்துரையாடினார். அப்போது, அங்கு வருகை தந்திருந்த பழவனக்குடி பொதுமக்களில் அய்ந்து பேர் வீடு மற்றும் பட்டா வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

6 மணி நேரத்தில் தீர்வு

அவர்களின் கோரிக் கையை கனிவுடன் பரிசீலித்து, அவற்றை நிறைவேற்றும் வண்ணம், திவ்யா ராஜு, நாகராஜ் முருகையன், ஸ்டாலின் சவுந்தரராஜன், சுகன்யா மேகநாதன் உட்பட 4 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதியுதவியை வழங்கும் வகையில் அதற்குரிய ஆணையையும், சுகன்யா மேகநாதனுக்கு வீட்டு மனைப்பட்டாவையும், நேற்று மாலையே துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் நேரில் வழங்கினார். தங்களுடைய கோரிக்கையை ஏற்று கோரிக்கை விடுத்த 6 மணி நேரத்துக்குள், தீர்வை ஏற்படுத்தி வீடு கட்ட நிதியுதவியும், வீட்டுமனைப் பட்டாவும் வழங்கியமைக்காக பய னாளிகள் அய்வரும் தமிழ்நாடு அரசையும், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *