தனியார் மருத்துவமனைகளில் சுரண்டல் உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

புதுடில்லி, மார்ச் 6 தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருந்தகங்களில் இருந்து அதிக விலைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை வாங்க நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக கூறி வழக்குரைஞர் விஜய் பால் டால்மியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரம் என்பது மாநில பிரச்சினை என குறிப்பிட்ட நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சுரண்டப்படுவதை தடுக்க பொருத்தமான கொள்கை முடிவுகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *