நீட்: குளறுபடி! உச்சநீதிமன்றம் தாக்கீது!

2 Min Read

புதுடில்லி, மார்ச் 6- 2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான (நீட்-பிஜி) மூன்றாம் கட்ட கலந்தாய்வை புதிதாக நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் 4.3.2025 அன்று உத்தரவிட்டது.

2024 நீட்-பிஜி கலந்தாய்வுக்கு தகுதிபெற்ற மருத்துவ மாணவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
2024-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவ இடங்களுக்கான சோ்க்கையில் மாநில ஒதுக்கீட்டிலான இடங்களுக்கு குறிப்பிட்ட சில மாநிலங்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு முன்னரே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதன் காரணமாக, அதிக மதிப்பெண் பெற்ற பல மாணவா்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இடம்பெற்றதோடு, அடுத்த நடைபெற்ற மாநில அளவிலான இரண்டாம் கட்ட கலந்தாய்விலும் பங்கேற்று சிறந்த மருத்துவ இடங்களைப் பெறும் வாய்ப்பைப் பெற்றனா். அவ்வாறு, இவா்கள் இரண்டு இடங்களையும் குறிப்பிட்ட நாள்களுக்குத் தடுத்து வைத்ததால், மனுதாரா் போன்ற தகுதிவாய்ந்த பல மாணவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மாநில அளவிலான இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பின்னரே, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

மத்தியப் பிரதேசம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வருவதற்கு முன்னரே, மாநில இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி முடித்துவிட்டன. இது அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21 வழங்கும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும்.

எனவே, முதுநிலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக நடத்த தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வினோத்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அதன் மீது பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தாக்கீது பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *