கிருட்டினகிரி, மார்ச் 6- தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி – சங்கரம் அறக்கட்டளை கிருட்டினகிரி – அரிமா சங்கம் கிருட்டினகிரி – கோவை சங்கரா கண் மருந்துவமனை – மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கிருட்டினகிரி ஆகியவைகளோடு இணைந்து – கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ.நாராயண மூர்த்தியின் சிறப்பான ஏற்பாட்டில் 02/03/2025 அன்று காலை 9.00 மணியளவில் கிருட்டினகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம் முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்டத் தலைவரும் சாயிராம் பர்னிச்சர் உரிமையாளருமான அனைத்து வணிகர் சங்க பேரவை மாவட்டச் செயலாளர் வெ.நாராயணமூர்த்தி வரவேற்றார்.
கிருட்டினகிரி மாவட்ட தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன் இலவச கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தி வரும் சங்கரம் அறக்கட்டளை மற்றும் உதவி செய்துள்ள அனைத்து அமைப்புகளின் மனிதநேய பணிகளைப் பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாளையொட்டி இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இலவச கண் சிகிச்சை முகமினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது பெயரில் தொடர்ந்து நடத்துவது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ள விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ. நாராயண மூர்த்திக்கும், மருத்துவ குழுவினருக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்விற்கு சங்கரம் அறக்கட்டளை நிறுவனர் டி.பாண்டுரங்கன், இணைச் செயலாளர் பாண்டியன், மற்றும் நிர்வாகிகள்,இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப்பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, மாவட்ட தொழிலாளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, நகரத் தலைவர் கோ.தங்கராசன், மாவட்ட துணைச் செயலாளர் சீனிமுத்து. இராசேசன், ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துக்கொண்டனர்.
இலவச கண் சிகிச்சை முகாம்
சங்கரம் அறக்கட்டளை சார்பில் கடந்த 29-ஆண்டுகளாக தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாமினை சிறப்பாக நடத்தி பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் இச்சேவையை (கண்ஒளி) பெற்று, பயன்பெற காரணமான சங்கரம் அறக்கட்டளை-கிருட்டினகிரி நிர்வாகிகள் அனைவரையும் திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங் கிணைப்பாளர் ஊமை. செயராமன் மேன் மேலும் அவர்களது மனிதநேய சேவை தொடர பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.