நீலமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடிவு கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

viduthalai
1 Min Read

நீலமலை, மார்ச் 6- நீலமலை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். குன்னூர் மருத்துவர் இல்லத்தில் 1.3.2025 காலை 10 மணியளவில். உற்சாகமாக நடை பெற்றது. நிகழ்விற்கு மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையேற்று நோக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ர.இராம் குமார் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் மு.நாகேந் திரன். மாவட்ட செயலாளர் ச.ஜீவா. முன்னிலை வகித்தனர். மருத்துவர் இரா.கவுதமன் கருத்துரையாற்றினார். நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ஆ.கருணாகரன் மாவட்ட துணைத் தலைவர் இரா.சத்தியநாதன் பொதுக் குழு உறுப்பினர் சி.இராவணன் கோத்தகிரி அமைப்பாளர் மூர்த்தி. அமைப்பாளர் மு.வாசுதேவன். குன்னூர் தினேஷ். ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்:

15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர் மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு நீலமலை மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95-அடிஉயர பெரியார் சிலையுடன் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நீலமலை மாவட்ட இளைஞரணி சார்பில் நிதி வசூல் செய்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
நீலமலை மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி, நகராட்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சாரக் கூட்டங்களை பரவலாக நடத்துவது தகவல் பலகை அமைப்பது துண்டறிக்கைகள் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *