அந்தோ அருமை நண்பர் கவிஞர் நந்தலாலா மறைவு நமது வீர வணக்கம்

1 Min Read

பிரபல பேச்சாளர், எழுத்தாளர், கருத்தாளரான திருச்சி தோழர் கவிஞர் நந்தலாலா (வயது 70) மறைந்தார் என்ற செய்தி மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். அவரது இயற்பெயர்
எஸ். நெடுஞ்செழியன் ஆகும்.
எதையும் கூர்த்த மதியுடன் ஆய்தல், நகைச்சுவைத் தேன் கலந்த உரையாடல், பேச்சு, தெளிவுமிக்க எழுத்தாற்றல் எல்லாம் அவரது தனித் தன்மையாகும்.
அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது அவரது குடும்பத்தினர், உறவினர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், படைப்புலகத் தோழர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலும், மறைந்த தோழருக்கு நமது இரங்கலும்.
அவருக்கு நமது தோழமை மிக்க வீர வணக்கம்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
4.3.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *