நாகர்கோவில் புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன நூல்கள் ரூ.77000 க்கு விற்பனை

1 Min Read

நாகர்கோவில்,மார்ச்4- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் நமது புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டது.

தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் சென்றனர். புத்தக திருவிழா நிறைவு விழாவில் குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், காப்பாளர் ம.தயாளன், துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், ஓட்டுநர் இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

புத்தக நிலைய ஊழி யர் அருண் குமார் விற் பனையை கவனித்தார். ரூ.77000க்கு இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின. புத்தக நிலைய விற்பனையை சிறப்பாக கவனித்த தோழர்களுக்கு மாவட்டத் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *