குடந்தை, மார்ச் 4- குடந்தை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 22-02-2025 அன்று மாலை 6.00 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் நடைபெற்றது.
குடந்தை மாநகர தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேஷ் வரவேற்புரை யாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையேற்று மாவட்டத் தில் நடைபெற வேண்டிய கழகப் பணிகள் குறித்து விரிவாக பேசினார்
மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் சு.விஜய குமார், ஆ.தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் மோகன்,ப.க மாவட்ட செயலாளர் சேதுராமன்,மாவட்ட மகளிரணி தலைவர் திரிபுரசுந்தரி மாவட்டத் துணைத் தலைவர் அழகுவேல், மாவட்டத் துணைச் செயலாளர் சரவணன்,பாபநாசம் ஒன்றிய தலைவர் பூவா னந்தம் குடந்தை ஒன்றிய தலைவர் மகாலிங்கம், வலங்கைமான் ஒன்றிய தலைவர் பவானி சங்கர், பாபநாசம் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் மோகன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், குடந்தை ஒன்றிய செயலாளர் அசூர் செல்வம், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தமிழ்வேந்தன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லெனின் பாஸ்கர், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில் ராஜ், செயலாளர் கண்ணன், மாவட்ட ப.க அமைப்பாளர் திரு ஞானசம்பந்தம், குடந்தை மாநகர இளைஞரணி தலைவர் முகமது ரியாஸ், பட்டீஸ்வரம் இளவழகன், மீன்சுருட்டி சேக்கிழார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
தீர்மானங்கள்
வலங்கை மேனாள் ஒன்றிய தலைவர் சந்திரசேகரன், மாவட்ட காப்பாளர் வலங்கை கோவிந்தன், கல்லூர் ஜெயலெஷ்மி காசிநாதன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடை பெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என்றும்,
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு குடந்தை மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என்றும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் சிலையுடன் அமையுள்ள பெரியார் உலகத்திற்கு குடந்தை கழக மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்குவது என்றும்,
குடந்தை கழக மாவட் டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி ,நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சார கூட்டங்களை மார்ச்,ஏப்ரல்,மே மாதங் களில் நடத்துவது,புதிய கிளைக் கழகங்களை உருவாக்குவது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.