சென்னை பெரியார் நகரில் (கொளத்தூர்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ‘‘பெரியார் அரசு மருத்துவமனை’’யை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பார்வையிடச் சென்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை மருத்துவர் ேஹமலதா ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டார் தமிழர் தலைவர்.
மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் சூழலை ஏற்படுத்தவும், புத்தொழில் தொடங்குவோர் தங்கள் அலுவலகமாக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘முதல்வர் படைப்பகம்’ (அகரம்) அலுவலகத்தைத் தமிழர் தலைவர் பார்வையிட்டார். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் (4.3.2025)