தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உறுப்பினர்களுக்கு மானியத்துடன் வீடு

1 Min Read

ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் தகவல்

சென்னை, ஜூலை 12- தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களில் வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தில் ரூ.55 கோடியில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வழங்க மானியம் வழங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், “தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர் களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் வீடுகள் தூய்மைப் பணியாளர் நலவாரிய மானியத்துடன் ரூ.55 கோடி மதிப்பில் வழங்கப்படும்’’ என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரூ.55 கோடி மதிப்பில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *