மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு ‘தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்!’

Viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 3 மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவ காரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சி யின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரசின் மேலி டப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா், சத்தியமூா்த்தி பவனுக்கு நேற்று (2.3.2025) வந்தாா். அவருக்குக் காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிரீஷ் சோடங்கா்
தொடா்ந்து கிரீஷ் சோடங்கா் தலைமையில் நிா்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. அதன் பிறகு அவா் செய்தி யாளா்களிடம் கூறிய தாவது:

கிராம கமிட்டி அளவில் சீரமைப்பு செய்திருப்பது தமிழ்நாடு காங்கிரசில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசால் தமிழ்நாட்டு மக்களின் மனங்களை வெல்ல முடியும்.
தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. எந்த வகையிலான திணிப்பும் கூடாது என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடாகும். மக்கள்தான் பிரதானம். மக்கள்தான் தங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்ய முடியும். தமிழ்நாட்டிற்கு எது நல்லது என்பதை பிரமதா் மோடி முடிவு செய்ய முடியாது. மொழித் திணிப்பதையும் நாங்கள் ஏற்பது இல்லை.

மக்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, சிறீபெரும்புதூ ரில் உள்ள ராஜீவ் காந்தி நினை விடத்தில் கிரீஷ் சோடங்கா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *