அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது!

1 Min Read

நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாகை, மார்ச் 3 தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக்கூடாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்று (3.3.2025) நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறிய தாவது:

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இதில் எந்தக் கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள் ளுங்கள்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கப் பார்க்கி றது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி.
பிள்ளைப்பேற்றை தள்ளிப் போடாமல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மக்கள்தொகை அதி கரித்தால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்று திருமண விழாவில் மணமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *