எப்.அய்.ஆர். இல்லாவிட்டாலும் ஜிஎஸ்டி தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரலாம்

Viduthalai
1 Min Read

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, மார்ச் 1 முன் ஜாமீன் பெறுவது சரக்கு சேவை வரி சட்டம் மற்றும் சுங்க சட்டத் துக்கும் பொருந்தும். எப்அய்ஆர் இல்லாவிட்டாலும் ஒருவர் கைதுக்கு முன்பாக ஜாமீன் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடலாம் என்ற முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 27.2.2025 அன்று வழங்கியுள்ளது.
ஜிஎஸ்டி வழக்கில் முன்ஜாமீன் பெறுவது தொடர்பாக ராதிகா அகர்வால் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பு விவரம்:
குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தில் உள்ள முன்ஜாமீன் போன்ற விவகாரங்கள், சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் உள்ள நபர்களுக்கும் பொருந்தும்.
ஜிஎஸ்டி மற்றும் சுங்க சட்டங்களின் கீழ் கைதை எதிர்கொள்ளும் நபர்கள், எப்அய்ஆர் பதிவு செய் யப்படுவதற்கு முன்பே முன்ஜாமீன் பெற உரிமை உண்டு. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *