Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
வரலாற்றுச் சுவடுகள்

திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)

Last updated: March 1, 2025 1:36 pm
Published March 1, 2025
SHARE

1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-

காந்தி சகாப்தத்தால் வந்த கேடு

“நான் சமுதாயத்தொண்டன். என் போன்று பாடுபட இந்த காரியத்திலே யாரும் முன்வரலே. நமது காரியம் முடிகிற சந்தர்ப்பத்திலே தான் இந்த நாசமாய்ப் போன இந்த “காந்தி சகாப்தம்” வந்தது. இல்லாது போனால் அப்பவே நமது காரியம் முடிஞ்சி போயிருக்கும். வெள்ளைக்காரன் செய்ததைவிட இந்தக் காங்கிரசு வந்து ஒண்ணும் பண்ணி டலே. அந்தக் காலத்திலேயே பறையனையும், பாப்பானை யும் சக்கிலியையும்,சட்ட சபையிலே ஒண்ணா உட்காராப் பண்ணிட்டான். பள்ளிக் கூடத்திலே உட்காராப்பண்ணினான். உத்தியோகத்திலே உட்காராப் பண்ணினான். இந்த மாதிரி ஒவ்வொரு காரியத்தையும் அவன்தான் பண்ணிகிட்டு வந்திருக்கிறான் பெருத்த எதிர்ப்புக்கிடையே.

1936-1937-லே எல்லா மாகாணத்திலேயும் காங்கிரசே ஜெயித்தது. அப்பதான் ஜஸ்டிஸ் கட்சி ஒழிஞ்சிது. எதிர்க் கட்சியே இல்லாத அளவுக்கு காங்கிரசு இந்தியா பூராவும் ஆட்சி. 13 மாகாணத்துக்கும் 13 முதன்மந்திரிகளும் பார்ப்பனர். இங்கே சென்னை மாகாணத்திலே, திரு. ராஜ கோபாலாச்சாரி காங்கிரசிலே பாடுபட்டார். அதனாலே அவர் முதல் மந்திரின்னு சொல்லலாம், மற்ற மாகாணத்திலே என்னா காரணம், மனுதர்மத்தைக் காப்பாற்றவே வந்தார்கள் எல்லா ரும். திரு.ராஜகோபாலாச்சாரியும் அப்படியே. காந்தியும் – மனுதர்மத்தைக் காக்கவும் – ராமராஜ்யத்தை – ஏற்படுத்தவும், – வருணாச்சிரம தர்மத்துக்காகவும் பாடுபட்டார். முதலிலே அவர் காட்டினார்-“சூத்திரன்” மந்திரியாகக் கூடாது, நிர்வாக அதிகாரியாகக் கூடாது, உத்தியோகத்திலே இருக்கக்கூடாது.அதனாலே உத்தியோகம் பாப்பானுக்கே வந்தது. அயோக் கியப் பாப்பானை எல்லாம் போட்டார் காந்தியார்.எப்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அரசியல் சட்டப்படி செல்லாது என்றானோ, அதுபோல் ஜாதி ஒழிப்புக்கும் சட்டப்படி செய்ய முடியாது.

Also read

வரலாற்றுச் சுவடுகள்
காந்தியின் மகிமை
எங்கும் இராமசாமி நாயக்கர்

தீண்டாமையையே ஒழிக்கிறபோது ஜாதியும் ஒழியாமலா போயிடும்னு நம்பின பயித்தியக்காரனிலே நானும் ஒருத்தன். “தீண்டாமையை ஒழிக்க திட்டங்கள் தயாரித்தபோது காந்தி தெளிவாகவே சொன்னார், கோயில் பிரவேசமோ ஜாதி ஒழிப்போ குளங்களில் தண்ணீர் எடுப்பதோ இந்த உரிமை யெல்லாம் கேட்கக்கூடாது என்று காந்தியார் சொன்னார்”. மனுதர்மம் இருக்கிறபோது அதற்குமாறான காரியம் எதுவும் தீண்டாமை விலக்குத் தொண்டிலே சம்பந்தப் படுத்தக் கூடாது என்றார்.இந்த நாட்டு மக்களுக்கு ஓட்டுரிமை தந்தது 1952லே. 1949 லேயே சட்டம் பண்ணிட்டான். இதை நாம ஒத்துக்கிட்டேங்கிறான். 1949லே யார் இந்தப் பிரதிநிதிகள்? 1949லே நாம இல்லாத போது செய்துகிட்ட சட்டம். நமது பொது மக்களுக்கு ஓட்டுரிமையில்லாத போது ஏற்படுத்திக் கிட்ட சட்டம். நம்மைச் சுதந்திரத்தின்பேராலே, சட்டசபை இல்லாத காலத்திலே, ஏற்படுத்தின சட்டம் எப்படி நம்மைக் கட்டுப்படுத்தும்? இப்படியாக ஏராளமான பித்தலாட்டம்.

தமிழன் பதவிக்குவரணும்

நான் காமராஜரை ஆதரிக்கிறேன்னு கூட பலபேருக்குக் கூட சங்கடம் இருக்கலாம். காங்கிரசை ஆதரிக்கிறேன்னு இல்லே. “தமிழன் பதவிக்குவரணும்”. நான் காங்கிரசை வளர்க்க விரும்பலே, என் தயவும் காங்கிரசுக்குத் தேவையில்லை. ஆனால், என்ன அவசியமிருந்தது எனக்கு,. காங்கிரசு ஜெயிக்காமல் போனால் பழையபடி பாப்பான் வந்திட்டால் நமது கதி என்னவாகும்? யாராவது ஒரு தமிழன் இருக்கட்டும். இந்த மாதிரி உணர்ச்சியைக் கொண்டுதான் இந்த எண்ணத்தின் பேரிலே ஏதோ காங்கிரசு வந்தாலும் தேவலாம்ன்னுதான் கருதினேன். என் சொந்தத்துக்காக இல்லை. ஏதோ இப்பவும் அந்த ஆள் (காமராசர்) இருக்கிற வரைக்கும், ஏதோ நம்மவர்களுக்கு உத்தியோகம் பாப்பா னுக்கு வராமலிருக்க வேணும்னு கருதினேன். உத்தியோகம் தானே முக்கியம். அதுக்குத் தானே எல்லாரும் வசப்பட்டிருக் கிறாங்க. அதனாலேதானே எல்லா காரியமும் செய்ய முடியுது. நாம சட்ட சபை மூலம் ஒண்ணும் செய்ய முடியாது. நாமளும் போவதில்லை. பின்னே எது மூலம் செய்யலாம்? சட்ட சபையிலும் நம்முடைய பிரதிநிதிகளுக்குப் பெரும் பாலும் இடமில்லை. எல்லாம் பார்ப்பனமயமாகி, எல்லாம் அவன் கைக்கே போயிட்டா, சர்வாதிகாரமாய் இருந்திட்டா, அவனுக்கு வேண்டியவன் களுக்காகவே நடத்த ஆரம்பிச்சிகிட்டானா நம்ம ஆளுங்க பெரும்பாலும் பாப்பானுக்கு அடிமையாய் இருந்திடுவாங்க. உணர்ச்சி இருக்கிறதும் கெட்டுப்போவும்.வைத்திய இலாகாவிலே ஒரு வேலை காலியாச்சி, ஒரு தமிழனுக்குக் கொடுத்தார் காமராசர், ராஜகோபாலாச்சாரி இருந்திருந்தா கட்டாயம் பாப்பானுக்குதான் கொடுத்திருப்பாரு Director of Public Health நிர்வாகம் பார்க்கிற வேலைதான் அது. அந்த இலாகாவின் தலைமை. இதை வைத்துகிட்டுதான் எழுதறான் “சுதேசமித்திரன் பத் திரிக்கையிலே” இவருக்கு முன்னாடி இருந்தவர் யாரைப் போடுன்னு சொல்லிவிட்டுப் போனாரோ அதன்படி காம ராஜர் போடலே. அவன் அனுபவஸ்தன், படிச்சவன் பாஸ் பண்ணினவன். இந்த ஆளுக்கு என்ன தெரியும்?” என்று எழுதுகிறான். இந்த ஆணவம் நிலைக்குமா? காமராசர் ஒழிஞ்சி நாங்க வந்தோமானால் நியாயமா உங்களுக்குக் கிடைக்கிறது கூட இனி கிடைக்குமா? தலை எடுக்க விடமாட்டோம், இதை அவன் சொல்றானைய்யா 1957லே ‘காந்திநாடு’ ஏற்புடையதா?

இந்த 1957-லேயாவது இந்த நாட்டுக்கு “காந்தி நாடு”ன்னு பேரு வைச்சா நான் வரவேற்பேன். “காந்தி-சகாப்தமானாலும்” நான் வரவேற்பேன். ஏன்? அஸ்திவாரமே இல்லாத நமக்கு, சம்பந்தமே இல்லாத நமக்கு, இழிவு தரும்படியான ஒரு நிலைமையில் உள்ள பேரு “பாரதநாடு” என்று இந்த நாட்டுக் குப் பேரு இருப்பதைவிட யாராவது ஒரு மனுஷனுடைய பேராக இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. எதுக் காக இந்த நாட்டுக்குப் “பாரதநாடு”-ன்னு பேரு இருக்க வேண்டும்? அதுக்கு என்னா அர்த்தம் சரித்திரத்திலே ஏதாவது இருக்குதா? போக்கிரித்தனமாய் “பாரதநாடு”-ங்கிறான். காந்தியார் இறந்த உடனேயும் சொன்னேன். இந்த நாட்டுக்குக் “காந்திநாடு”-ன்னு வைக்கச் சொன்னேன். அதாவது “வருஷம்” என்ற துக்கு நமக்கு ஆதாரமே கிடையாது. உலகத்திலே மற்ற எல்லாருக்கும் இருக்குது. உலகம் பூராவும் “வருஷம்” என்கிறதுக்குக் கிறிஸ்து பேரிலே இருக்குது. கிருஸ்து பிறந்து 1957ஆம் வருஷத்தில் இன்று நாம இருக்கிறோம். நமக்குன்னு என்னா இருக்குது சொல்லிக் கொள்ள? நான் பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் பிறந் தேன். பிரமாதி வந்து எத்தனை வருஷமாச்சி, 17 வருஷமாச்சி, இன்னைக்கு எனக்கு 17 வயது இப்போ? எந்த பிரமாதி? எவனும் கேட்கிறதில்லே? பாப்பான் அவ்வளவு புரட்டு பண்ணிட்டான். 20,000 வருஷம் இந்த நாடு எங்கே எப்படி இருந்ததோ தெரியாது? “முஸ்லீம்” முகம்மது நபி பிறந்தது முதல் வருஷம் கணக்கிடுகிறான், எனவே “காந்திபேராலே வருஷம் கணக்கிடட்டும் என்கிறேன்”.

Ad imageAd image

You Might Also Like

ஒத்தக் காசுச் செட்டியார்

சுயராஜ்யக் கட்சியார்

உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்

சிந்தனைக்குத் தடை ஏன்?

“குடிஅரசு” செய்தித்தாளாகவா இருக்க வேண்டும்?

TAGGED:காந்திதமிழன்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?