மேனாள் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், திராவிடர் கழகம் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளில் ‘‘அறிவியலும் – மூடநம் பிக்கையும்’’ என்ற தலைப்பில் பல்லாண்டுக் காலம் வகுப்புகளை நடத்திய வரும், ‘உண்மை’ இதழில் இது தொடர்பாகத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தவரும், ‘இராவண காவியம்’ தொடர் சொற்பொழிவுகளை நடத்தியவரும், ‘‘பெரியாரின் போராட்டங்கள்’’, ‘‘வாஸ்து அறிவியலா?’’ உள்பட பல நூல்களின் ஆசிரியருமான பெரியார் பெருந்தொண்டர் புள்ளம்பாடி புலவர் ந. வெற்றியழகன் (வயது 90) இன்று (28.2.2025) விடியற்காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவருக்கு மூன்று மகள்கள். மகள் தமிழ்மலர் வீட்டில்தான் அவர் இருந்தார். அவர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
28.2.2025
தொடர்புக்கு: 9786118311
குறிப்பு: கழகத் துணைத் தலைவர்
கலி. பூங்குன்றன் மகள் தமிழ்மலரிடம் அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.