புலவர் ந. வெற்றியழகனுக்கு ஆழ்ந்த இரங்கல்!

1 Min Read

மேனாள் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், திராவிடர் கழகம் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளில் ‘‘அறிவியலும் – மூடநம் பிக்கையும்’’ என்ற தலைப்பில் பல்லாண்டுக் காலம் வகுப்புகளை நடத்திய வரும், ‘உண்மை’ இதழில் இது தொடர்பாகத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தவரும், ‘இராவண காவியம்’ தொடர் சொற்பொழிவுகளை நடத்தியவரும், ‘‘பெரியாரின் போராட்டங்கள்’’, ‘‘வாஸ்து அறிவியலா?’’ உள்பட பல நூல்களின் ஆசிரியருமான பெரியார் பெருந்தொண்டர் புள்ளம்பாடி புலவர் ந. வெற்றியழகன் (வயது 90) இன்று (28.2.2025) விடியற்காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவருக்கு மூன்று மகள்கள். மகள் தமிழ்மலர் வீட்டில்தான் அவர் இருந்தார். அவர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
28.2.2025 
தொடர்புக்கு: 9786118311
குறிப்பு: கழகத் துணைத் தலைவர்
கலி. பூங்குன்றன் மகள் தமிழ்மலரிடம் அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *