” தந்தை பெரியாரின் உரிமைப் போர்” பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 461ஆவது வார நிகழ்வாக கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் 24.2.2025 அன்று இரவு 7 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம் முன்னிலையில் திருமுல்லைவாயில் பகுதி கழக தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தே.குணாபாரதி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் அரவிந்தன், கருப்பசாமி , ஆறுமுகம், சுமதி மணி, ஹரிதாஸ், சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக இல்.கார்த்திக் நன்றி கூறினார்.