பெரியார் பிறவாமலிருந்தால்… தெருமுனைக் கூட்டம்

viduthalai
1 Min Read

ஆண்டிப்பட்டி, பிப்.27- சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் வே.ஜோதி நினைவு மேடையில் பெரியார் பிறவாமலிருந்தால் என்கிற தலைப்பில் 24.2.2025 அன்று ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் அருகில் மாலை 6 மணி அளவில் தெருமுனைக் கூட்டம் தேனி மாவட்ட கழக துணைத் தலைவர் ஸ்டார். சா.நாகராசன் தலைமையில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் போடி. ம.சுருளிராஜ், அனைவரையும் வரவேற்புரை ஆற்றினார்.

அழகர் ராசா. நகர தலைவர், ஆண்டிச்சாமி நகர செயலாளர், ஸ்டார் நா. ஜீவா மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.கண்ணன்ஆகியோர் ஒருங் கிணைப்பு செய்தார்கள்.

அ.மன்னர் மன்னன், கருப்பு சட்டை நடராசன் பொதுக்குழு உறுப்பினர் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.

உரத்தநாடு.இரா.குணசேகரன்

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பங்கேற்று உரையாற்றினார். ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களின் தொண்டினை ஆற்றிய உரையின் முக்கியத்துவத்தை விளக்கியும், மேற்கொள்ளவேண்டிய கடமைகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.

இரா.பெரியார்செல்வம்

கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வம், பெ.ராசாராம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர், பா.சரவணன், பேரூர் தி.மு.க நகர செயலாளர், அ.பரமேஸ்வரன் பேரூர் தி.மு.க அவைத்தலைவர், ம.ப.சரவணன், 14ஆவது திமுக மாவட்ட பிரதிநிதி வே.பரமேஸ்வரன், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் க.முனிஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் 2 மணி நேரம் பெரியரின் சிறப்புகள் – இயக்கம் கடந்து வந்த பாதை மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களின் தனித் தன்மைகள் பற்றி உரையாற்றினர்.

நிகழ்வில் ஆண்டிபட்டி நகர தலைவர் வே.ஜோதியின் துணைவியார் சரஸ்வதி அம்மா அவர்களுக்கு ஜோதி அவர்களின் நினைவாக அவரின் பெருமைகள் பேசி சிறப்பு செய்யப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *