சென்னை, பிப். 27- சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் இன்று (27.2.2025) வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான “பெரியார் அரசு மருத்துவமனை”யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, விழாப் பேருரை ஆற்றுகிறார்.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப் பிக்கின்றனர்.