கடப்பா, பிப். 26- இன்று (26.2.2025) மகா சிவராத்திரியையொட்டி, ஆந்திர மாநிலத்தின் அன்னமைய்யா மாவட்டம், வை.கோட்டா கிராமத்தை சேர்ந்த சுமார் 15 பக்தர்கள், அருகே குண் டாலகோனா வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நேற்று காலை நடந்து சென்ற னர். இவர்களில் ஒருவர் தான் கொண்டு வந்த டிபன் பாக்ஸ் மூடியை தட்டிக்கொண்டே சென்றதாக தெரிகிறது.
இந்த சத்தம் கேட்ட காட்டு யானைகள் கூட்டம், திடீரென இவர்களை சுற்றி வளைத்து மதம் பிடித்தவாறு தாக்கத் தொடங்கின.
இதனை சற்றும் எதிர் பார்க்காத பக்தர்கள் அங்கிருந்த தப்பியோட முயன்றனர். எனினும் யானைகள் தாக்கியதில் தினேஷ், மணியம்மா, செங்கலராயுடு ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த இருவரும் ரயில்வே கோடூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு இவர்கள் மேல் சிகிச் சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிதியுதவி
இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு (நாயுடு) அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத் தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என வனத்துறை அமைச் சரும் துணை முதலமைச்சரு மான பவன் கல்யாண் அறி வித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.