நேற்று (24.02.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைமை அலுவலகத்தில் ஆணையத் தலைவர் முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன் முன்னிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இமையம்
(வெ.அண்ணாமலை) பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் க.லட்சுமிபிரியா, ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் ச.அண்ணாதுரை, ஆணைய உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் நியமணம்

Leave a Comment