சென்னை, பிப்.25- நீர் மேலாண்மை, கழிவு நீர் மறுசுழற்சி, உப்புநீர் நீக்குதல், வடிகட்டி அமைப்புகள், தூய்மை தீர்வுகள், பம்பிங் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் வாட்டர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் போன்ற பல வகையான தயாரிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகளின் கண்காட்சி – கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் (நாளை) 26.2.2025 முதல் 28.2.2025 வரை நடைபெறுகிறது.
தெற்கு ஆசியாவின் முன்னணி B2B நிகழ்வு வாட்டர் டுடேஸ் வாட்டர் எக்ஸ்போ தனது 18ஆவது பதிப்பான இந்த கண்காட்சியில் முன்னணி தொழில் நிபுணர்கள் பங்கேற்று நவீன தொழில்நுட்பகங்களை விளக்குவது மற்றும் புதுமையான தீர்வுகளை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் முக்கிய நிகழ்வாகவும், நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளை மேம்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு மேம்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தளமாக இக்கண்காட்சி அமையும். இந்த கண்காட்சியில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 200 நிறுவனங்கள் பங்கேற்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.