சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

2 Min Read

நாமக்கல், பிப். 25- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார் பாக பொத்தனூர் பெரியார் திடலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 11 உடல் கொடை உறுதிமொழி வழங்கும் நிகழ்வு உள்ளடக்கிய பொதுக்கூட்ட நிகழ்வு 22.2.2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை தலைவர் பொத்தனூர் க சண்முகம் தலைமை வகித்தார்.
வழக்குரைஞர் ப இளங்கோ மாநில அமைப்பாளர் ப க வரவேற்புரை யாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், பழனிபுள்ளையண்ணன் கழக காப்பாளர், ஆ கு குமார் மாவட்ட தலைவர், வழக்குரைஞர் வை பெரியசாமி மாவட்ட செயலாளர், த சண்முகம் தலைமை செயற்குழு உறுப்பினர், வீர முருகன் மாவட்ட பக தலைவர் முன் னிலை வகித்தனர்.

பேராசிரியர் ப காளிமுத்து உடல் கொடை வழங்குவது சம்பந்தமாக இருக்கின்ற மூடநம்பிக்கை பற்றி விரிவாக எடுத்துரைத்து தொடக்க உரையாற்றினார்.
வழக்குரைஞர் சே.மெ.மதிவ தனி (திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர்) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பற்றியும் மருத்துவக் கல்லூரிக்கு உடல் கொடை வழங்குவது பற்றி மிக சிறப்பான முறையில் மக்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் உரையாற்றினார்கள்

திராவிடர் கழகம்
உடல் கொடையை பாராட்டி வாழ்த்துரை வழங்கியவர்கள்

ஆர் கருணாநிதி பொத்தனூர் பேரூராட்சி சேர்மன் திமுக, த பவுன்ராஜ் மாநில மாணவரணி துணைச் செயலாளர் மதிமுக, மேட்டூர் மாவட்ட தலைவர் எடப்பாடி பாலு, சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, கரூர் மாவட்ட தலைவர் ப குமாரசாமி,
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பொறுப்பாளர்கள்
மாவட்டத் துணைத் தலைவர் அசேன். சு சரவணன் நகர தலைவர், ஆ காமராஜ் நகர செயலாளர், குமாரபாளையம் வெ மோகன் திருச்செங்கோடு நகர தலைவர், ஆனந்தகுமார் கணேசன் மாவட்ட இளைஞரணி தலைவர், பள்ளிபாளையம் ஒன்றிய தலைவர் மு சீனிவாசன், வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் இலப செல்வகுமார், மு செங்கோடன் பரமத்தி ஒன்றிய தலைவர், வேலூர்நகர தலைவர் சாகுல், பொத்தனூர் நகரத் தலைவர் அன்புமணி, மதிமுக ராஜசேகர், படிப்பக பொறுப்பாளர் சுந்தரம்,

உடல் கொடை வழங்கியவர்கள்

பொத்தனூர் க.சண்முகம், அகிலாண்டம் தங்கவேல், வீர முருகன், எஸ்.ஆர்.ஆனந்தன், கே.பெரியசாமி, மருத அறிவாயுதம், இராமசாமி, த.சித்தார்த்தன், முத்து கண்ணன், முத்து சரவணன் ஆகியோர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *