தேனி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
தேனி, பிப். 24- தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் 16.2.2025 அன்று கழக காப்பாளர் போடி. ச.இரகுநாகநாதன் தலைமையில் கம்பம் கழக காப்பாளர் கருப்புச் சட்டை சு.நட ராசன், மாவட்டத் தலைவர் போடி. ம.சுருளிராஜ், மாவட்டச் செயலாளர் தேனி.பூ.மணிகண்டன்,ஆகியோர் முன்னிலையில் உற்சாக மாக நடைபெற்றது.
முதல்நிகழ்வாக புதிய பொறுப்பாளர்களான காப்பாளர் ச.இரகு நாகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பு.பேபி சாந்தாதேவி, மு.அன்புக் கரசன், மாவட்டத் துணைத்தலைவர் ஸ்டார்.சா.நாகராசன்,மாவட்ட துணைச்செயலாளர் லோ. முத்துச்சாமி ஆகியோருக்கு மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ், மாவட்டச் செயலாளர் தேனி பூ.மணி கண்டன் இருவரும் பயனாடை போர்த்தி மகிழ்ந்தார்கள்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குண சேகரன் பங்கேற்று சிதம் பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையின் முக் கியத்துவத்தை விளக்கியும், நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களை செயலாக்க மேற்கொள்ளவேண்டிய கடமைகளை எடுத்து ரைத்து உரையாற்றினார்.
.கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன். பொதுக்குழு உறுப்பினர் கள் பு .பேபி சாந்தாதேவி, மு. அன்புக்கரசன் மாவட் டத் துணைத் தலைவர் ஸ்டார் சா.நாகராசன் மாவட்ட துணைச் செய லாளர் லோ. முத்துசாமி மாவட்ட ப.க. செயலாளர் ஆண்டிப்பட்டி
செ. கண்ணன், ச.சென் றாயன், ரா .வெங்கடேசன், ஓ.அன்னக்கொடி, ச.முரு கன், பால் .ஆதி தமிழன், ஆர் ஆண்டிச்சாமி ஆர் பெரியார்லெனின் உள்ளிட்ட தோழர் கள் பங்கேற்று கருத் துரைத்தார்கள். இறுதி யில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவது என்றும், அன்னை மணியம்மையார் பிறந்தநாள்விழா 10.3.2025 அன்று பெரியகுளத்தில் அன்னை மணியம்மையார் நினைவுநாள் கூட்டம் போடியிலும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.