பிரயாக்ராஜ்,பிப்.24- கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 18 பக்தர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த 15Mம் தேதி இரவு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ஏராளமான பக்தர்கள் புதுடில்லி ரயில் நிலையத்தில் கூடியிருந்தபோது, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில ரயில்கள் வேறு நடை மேடையில் வருவதாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இரண்டு நடைமேடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், இதனால் சிலர் மயக்கமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. மூச்சுத் திணறல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்த பயணிகளுக்கு தலா ரூ.2.5 லட்சமும், சிறிய காயமடைந்த பயணிகளுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக ரயில்வே அறிவித்தது. இந்த நிலையில் புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 18 பேரின் உடற்கூராய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த உடற்கூராய்வு அறிக்கையின்படி பலியான 18 பேரில் பெரும்பாலானோர் மூச்சுத் திணறல் மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. 18 பேரில் 15 பேர் மூச்சுத்திணறல் காரணமாகவும், இரண்டு பேர் ரத்தக்கசிவு அதிர்ச்சியாலும், ஒருவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
கும்பமேளாவின் கடாட்சமோ? பலியானவர்களின் சோகக் கதை!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
