‘போதைப் பொருள் வேண்டாம்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை வலியுறுத்தி, சென்னையில் நடைப் பயணம்!

1 Min Read

சென்னை, பிப். 23- ரோட்டரியின் 120-ஆவது தொடக்க நாளை நினைவுகூரும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3234, யுடன் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான ‘வேண்டாம் போதைப் பொருள்’ என்ற பிரச்சாரத்துக்கான ‘அமைதி நடைப் பயணத்தை’ இன்று (23.2.2025) நடத்தியது.

தமிழ்நாடு

இதில் சென்னையைச் சேர்ந்த 2,700க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ரோட்டராக்ட் உறுப்பினர்கள், ரோட்டரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். லேடி வெலிங்டன் பள்ளியிலிருந்து ராணி மேரி கல்லூரிக்கு இந்த நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. பதின்பருவத்தினர், இளைஞர் களிடையே போதைப் பொருள் பிரச்சினை, அது சார்ந்த குற்றங்களுக்கு எதிரான ஒரு கூட்டுத் தீர்மான உணர்வை இது வெளிப்படுத்தியது.

இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் என்.எஸ்.சரவணன் டிஸ்ட்ரிக்ட் ரோட்டராக்ட் அமைப்பின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், மயிலாப்பூர் மண்டல உதவி காவல் ஆணையர் டி.விவேகானந்தன், மாநாட்டின் தலைவர் எஸ்.ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *