செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவிகிதம் உயர்வு சி.அய்.அய். அறிக்கையில் தகவல்

2 Min Read

புதுடில்லி, பிப். 22 செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடி வெடுக்கும் திறன் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது என சி.அய்.அய். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஅய்அய்) 4-ஆவது பன்னாட்டு கருத்தரங்கு, ‘தி ஏ.அய். இந்தியா கண்காட்சி 2025’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. இதில் ‘செயற்கை நுண்ணறிவின் போக்கு மற்றும் எதிர்கால தாக்கம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை பிராட்டிவிட்டி என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனமும், சிஅய்அய் அமைப்பும் இணைந்து தயாரித்தது. இதில் கூறியிருப்பதாவது:

செயற்கை நுண்ணறிவு(ஏஅய்) தொழில்நுட்பம் பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவிகிதம் அதிகரிக்கிறது. இந்திய தொழில்களில், வெகு விரைவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக அதிகரிக்கவுள்ளது. ஏஅய் பயன்பாட்டை தங்கள் நிறுவ னங்களில் விரைவில் விரிவுபடுத்த திட்டமிட்டருப்பதாக, நாட்டில் உள்ள 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏஅய் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தயார் நிலையில் இருப்பதாக 10-ல் 6 நிறுவனங்கள் (59 சதவிகிதம்) தெரிவித் துள்ளன. 38 சதவிகித நிறுவனங்கள் ஏஅய் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வமாக உள்ளன.

ஏஅய் நிர்வாகத்தை அமல்படுத் துவதில் சில பிரச்சினைகள் இருப் பதால், 23 சதவிகித நிறுவனங்கள் மட்டும் ஏஅய் நெறிமுறைகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை அமல் படுத்தியுள்ளன. ஏஅய் தணிக்கை மற்றும் சார்பு மதீப்பீடுகளுக்கு 40 சதவிகிதத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன. ஏஅய் பயன்பாட்டை தங்கள் நிறுவனங்களில் விரைவில் விரிவுபடுத்தப்போவதாக 51 சதவிகித நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏஅய் பயன்பாட்டை படிப்படியாக அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக 32 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ‘பிரிடிக்டிவ் ஏஅய், சாட்பாட்ஸ் மற்றும் மெஷின் லேனிங் போன்ற பல ஏஅய் தொழில்நுட்பங்கள் அதி களவில் அமல்படுத்தப்பட்டுள்ளன. ‘ஜெனரெட்டிவ் ஏஅய் மற்றும் ஏஜென்டிக் ஏஅய் போன்ற பிரபல தொழில்நுட்பங்களை விரைவில் பயன் படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

செயல்பாட்டுத் திறன்

சுகாதாரத்தறை, நிதி சேவைகள், உற்பத்தி, போக்குவரத்து, தொலை தொடர்பு, விமான போக்குவரத்து உட்பட 300-க்கும் மேற்பட்ட நிறுவ னங்களின் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களைப் பொறுத்த வரை, செயல்பாட்டு செயல்திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை ஏஅய் தொழில்நுட்ப பயன்பாட்டின் முதல் மூன்று வணிக நோக்கங்களாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *