புதுடில்லி, பிப்.22 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் திருத்தம் செய் துள்ளது. முன்னதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அர சின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது.
பறிப்பு
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை ஒன்றிய அரசு பறித்துள்ளது. இதன்படி மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்கலாம். தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க அனுமதி கோரி நேரடியாக ஒன்றிய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? மாநில கல்வித் துறையிடம் ஒன்றிய அரசு கருத்து கேட்கும். மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.