அண்ணாமலையின் உளறலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பதிலடி

1 Min Read

சென்னை,பிப்.22- நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை

எது வேண்டுமானாலும் உளறுவதா?

மேலும், ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியிருப்பதாவது:-
ஹிந்தி படிக்க வேண்டிய தேவை என்ன? ஹிந்தியை படிப்பதால் என்ன பயன்? ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை. ஹிந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் கட்டட வேலைக்கு வருகின்றனர். நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது. அந்தப் பள்ளி இன்னமும் செயல்பட கூடத் தொடங்கவில்லை.
எங்களது இடத்தில் பள்ளியை தொடங்க உள்ளார்கள் என்பதால் எனது பெயரை பயன்படுத்தி யுள்ளனர். அண்ணாமலை நாகரிக அணுகுமுறையை தவிர்த்துவிட்டு எது வேண்டுமானாலும் பேசலாம் எனப் பேசுகிறார். மாணவர்கள் மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தரட்டும். போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விஷயத்தில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *