சீனா ஆக்கிரமித்த நிலங்கள் – என்ன செய்கிறது இந்தியா?

2 Min Read

மல்லிகார்ஜூனா கார்கே கேள்வி

புதுடில்லி, பிப்.22 இந்தியாவின் தேசப் பாது காப்பையும், பிராந்திய ஒரு மைப்பாட்டையும் மோடி அரசு ஆபத்தில் ஆழ்த்தி உள்ளதாக காங் கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

சீனா ஆக்கிரமிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கூறப் பட்டு இருப்பதாவது: “சீனாவுக்கு இந்தியாவின் கோபத்தை (சிவந்த கண்களை) காட்டுவதற்குப் பதிலாக சிவப்பு கம்பள வரவேற்பை பிரதமர் மோடி அளிக்கிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை மிகவும் முக்கியமானவை. ஆனால், மோடி அரசோ அவற்றை ஆபத் தில் ஆழ்த்துகிறது. உண்மைகளை அடிப்படை யாகக் கொண்ட குற்றச் சாட்டுக்களை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் முன்வைக்கிறோம். அரு ணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா 90 புதிய கிராமங்களில் குடி யேற்றத்தைத் தொடங்கி யுள்ளது. முன்னதாக, நமது எல்லையில் சீனா இதுபோன்று 628 கிரா மங்களில் சீனர்களை குடியேற்றியதாக செய்தித் தாள்கள் தெரிவித்தன.

மோடி அரசு எல்லையில் ‘துடிப்பான கிராமங்கள் திட்டத்தை’ நிறைய ஊக்குவிக்கிறது. இது குறித்து நாடாளு மன்றத்தில் பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசினார். ஆனால், உண்மை என்னவென்றால், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் 90 சதவிகி தம் நிதி கடந்த இரண்டு ஆண்டுகளில் செல விடப்படவில்லை. இந்தத் திட்டம் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட ரூ.4,800 கோடி நிதியில் ரூ.509 கோடி மட்டுமே செல விடப்பட்டுள்ளது. இதேபோல், இமாச்சலப் பிரதேசத்தில், 75 கிராமங்கள் மேம்படுத்தப் பட வேண்டிய நிலையில், மோடி அரசாங்கம் கிட் டத்தட்ட எந்த நிதியையும் வழங்கவில்லை.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து
டிசம்பர் 2024-இல், சீனா பிரம்மபுத்திரா நதி யின் மீது ‘உலகின் மிகப் பெரிய அணையை’ கட்டப்போவதாக அறி வித்தது. இது நமது தேசிய பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக் கும் பேரழிவை ஏற்படுத் தும். இந்தியாவின் நன்னீர் வளங்களில் 30% பிரம்மபுத்திரா நதியில் உள்ளது, இதன் ஓட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.
2022-ஆம் ஆண்டு மாநி லங்களவையில் வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலின்படி, “மார்ச் 2021-இல், சீனா தனது 14-ஆவது அய்ந்தாண்டு திட்டத்தை ஏற்றுக்கொண்டது, இது பிரம்மபுத்திரா நதியின் கீழ் பகுதிகளில் நீர்மின் திட்டங்களுக்கான திட்டங் களைக் குறிப்பிடுகிறது” என்று உங்கள் அரசு கூறியது. அப்படியானால், 2021-ஆம் ஆண்டிலிருந்தே மோடி அரசு இந்த விஷயத்தைப் பற்றி அறிந் திருந்தது, ஆனாலும் உங்கள் அரசு முற்றிலும் அமைதியாக இருந்தது.
விசயம் தெளிவாக உள்ளது… பிரதமர் மோடி அவர்களே, உங்கள் அரசாங்கத்தின் முன் னுரிமை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அல்ல, உங்களுக்கான மக்கள் தொடர்பும் பொய்யான விளம்பரங்களுமே!” இவ் வாறு அந்த பதிவில் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *