கை, கால்களில் விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் காட்சிப் பதிவு வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை!!

1 Min Read

வாசிங்டன், பிப்.20 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் சங்கிலியால் கட்டிய புதிய காட்சிப் பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தி வருகிறது. இந்நிலையில், நாடு கடத்தப்படும் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிட்டு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். நாடு கடத்தப்படும் இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு போட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா சென்ற மோடி, அதிபர் டிரம்ப்பிடம் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் சங்கிலியால் கட்டிய புதிய காட்சிப் பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைவிலங்கு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது வெளியிட்ட இந்த காட்சிப் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வீடியோவை அமெரிக்கா வெளியிட்டு இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *