‘சச்சி ராமாயணம்’ நூல் உத்தரப் பிரதேசத்தில் பரப்புரை லால்சிங் தமிழர் தலைவருடன் சந்திப்பு

viduthalai
1 Min Read

உத்தரப் பிரதேசம் வாரணாசிக்கு அருகில் உள்ள ஜவன்பூர் பகுதியில் சமூக நீதிபேரவை(சமாஜிக் ந்யாய்மஞ்ச்) என்ற அமைப்பை நடத்திவரும் லால்சிங் 31.01.2025 அன்று ஆசிரியரைச் சந்தித்தார்.

30.01.2025 அன்று மதியம் சென்னை வந்து இறங்கிய இவரை தமிழ்நாடு அரசின் உயர்பதவியில் உள்ள இவரது இளைய சகோதரர், முதலில் பெரியார் திடல் சென்று பார்த்துவிட்டு பிறகு இதர பகுதிகளைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கூறி அவருக்கு உதவியாக ஓட்டுரையும் அனுப்பி வைத்தார். இரண்டு நாட்கள் பெரியார் திடலில் இருந்து தந்தை பெரியார் குறித்து பல தகவல்களை அறிந்துகொண்டார்.

இவர் தந்தை பெரியாரின் ‘சச்சி ராமாயண்’ என்ற ஹிந்தி நூலை இவரது குடும்பத்தினர் நடத்தும் பெட்ரோல் பங்க்கில் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தந்து பகுத்தறிவைப் பரப்பும் பணியை செய்துவருகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *